(FASTNEWS|COLOMBO) தடை செய்யப்பட்ட வலைகளை பயன்படுத்தி சட்டவிரோதமாக கடற்றொழிலில் ஈடுபட்ட 24 மீனவர்கள் திருகோணமலை – மலைமண்டால கடற்பகுதியில் கடற்படையினரால் மேற்கொள்ளப்பட்ட சுற்றி வளைப்பின் போது வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைதானவர்கள் பயணித்த 4 படகுகளும் பறிமுதல் செய்யப்பட்டன.
இந்த நிலையில், குறித்த மீனவர்கள் மேலதிக விசாரணைகளுக்காக திருகோணமலை உதவி கடற்றொழிலாளர் திணைக்களத்திடம் கையளிக்கப்பட்டுள்ளனர்.