(FASTNEWS|COLOMBO) நுழைவு அனுமதி காலாவதியான நிலையில் இலங்கையில் தங்கியுள்ள 8 ஆயிரம் வெளிநாட்டவர்கள் நாடுகடத்தப்படவுள்ளனர்.
இவர்களை நாடு கடத்த உள்துறை அமைச்சு நடவடிக்கைகளை எடுக்க தீர்மானித்துள்ளது.
சிரேஷ்ட அமைச்சரொருவர் இதற்கு தேவையான நிதியினை பெறும் நோக்கில் உள்துறை அமைச்சு, அமைச்சரவையின் அனுமதியை கோரியுள்ளதாக தெரிவித்துள்ளார்.
உயிர்த்த ஞாயிறு தாக்குதலை அடுத்து சட்டவிரோதமாக இலங்கையில் தங்கிருந்த 7ஆயிரத்து 900 வெளிநாட்டவர்கள் குறித்த விவரங்கள் பெறப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.