
கடுவலை – கோட்டை வரையிலான இலகு ரயில் பாதை அமைக்கும் பணிகள், அடுத்த மாதம் ஆரம்பம்
(FASTNEWS|COLOMBO) – கடுவலையில் இருந்து, கொழும்பு – கோட்டை வரையிலான ரயில் பாதை அமைக்கும் பணிகள், அடுத்த மாதம் 5ம் திகதி ஆரம்பிக்கப்படும் என அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.
அத்துருகிரிய பிரதேசத்தில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றும் போதே, அமைச்சர் இவ்விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.