ஒனெலா கருணாநாயக்க CID யில் ஆஜர்

(FASTNEWS|COLOMBO)- அமைச்சர் ரவி கருணாநாயக்கவின் மகள் ஒனெலா கருணாநாயக்க வாக்குமூலம் வழங்குவதற்காக குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் ஆஜராகியுள்ளார்.

மத்திய வங்கி பிணைமுறி மோசடி சம்பந்தமாக விசாரணை செய்த ஜனாதிபதி ஆணைக்குழுவில் பொய் சாட்சியம் வழங்கியமை தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்காகவே அவர் ஆஜராகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது