ஹுங்கம துறைமுகத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 20க்கும் அதிக மீன்பிடிப் படகுகள் தீக்கிரை

(FASTNEWS|COLOMBO) – ஹுங்கம – குருபொத்துன துறைமுகத்தில் இன்று(26) அதிகாலை ஏற்பட்ட தீப்பரவல் காரணமாக துறைமுகத்தில் நங்கூரமிடப்பட்டிருந்த 20க்கும் அதிகமான மீன்பிடிப் படகுகள் தீயில் எரிந்து சேதமாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

தீ விபத்திற்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை என்பதுடன், சம்பவம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

இதேவேளை, தீயைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கையில் இரண்டு தீயணைப்பு வாகனங்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.