(FASTNEWS|COLOMBO) – அரச ஊழியர்களின் அலுவலக ஆடைகள் தொடர்பான புதிய சுற்றறிக்கை ஒன்றை வௌியிடுவதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
நேற்று ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தின்போது பொது நிர்வாக மற்றும் உள்துறை அமைச்சர் ரஞ்சித் மத்துமபண்டார இதுகுறித்த அமைச்சரவை பத்திரத்தை முன்வைத்தார்.
அதன்படி, அரச சேவையில் உள்ள பெண்கள் சேலை மற்றும் ஒசரி போன்றவற்றுக்கு மேலதிகமாக எந்தவகையான ஆடைகளையும் அணிய முடியுமென்றும் அந்த ஆடை முகத்தை முழுமையாக மறைக்காதவையாக இருக்க வேண்டுமெனவும் அமைச்சரவை தீர்மானித்துள்ளது.