நேவி சம்பத்திற்கு தொடர்ந்தும் விளக்கமறியல்

(FASTNEWS | COLOMBO) – 2008 ஆம் ஆண்டு கொழும்பில் 11 இளைஞர்கள் கடத்தப்பட்டு காணாமற் போன சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள லெப்டினென் கமாண்டர் ஹெட்டியாராச்சி முதியன்சலாகே சந்தன பிரசாத் ஹெட்டியாராச்சி எனும் நேவி சம்பத்தை எதிர்வரும் 03ம் திகதி வரையில் தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு கோட்டை நீதவான் நீதிமன்றம் இன்று(26) உத்தரவு பிறப்பித்துள்ளது.

மேலும், இது குறித்த விசாரணைகள் தற்போது இறுதிக் கட்டத்தினை எட்டியுள்ளதாக குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினால் நீதிமன்றுக்கு அறியப்படுத்தியுள்ளது.