முன்னாள் பிரதம நீதியரசருக்கு எதிரான மனு விசாரணையில் இருந்து நீதிபதி ஒருவர் விலகல்

(FASTNEWS | COLOMBO) – நீதிமன்ற அவமதிப்பு குற்றச்சாட்டு தொடர்பில் முன்னாள் பிரதம நீதியரசர் சரத் என் சில்வாவுக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனு விசாரணைகளில் இருந்து உச்ச நீதிமன்ற நீதிபதி சிசிர டி அப்ரூ விலகியுள்ளதாக எமது நீதிமன்ற செய்தியாளர் தெரிவித்திருந்தார்.

குறித்த முறைப்பாடி இன்று(28) சிசிர டி அப்ரூ, விஜித் மலல்கொட மற்றும் ப்ரீதி பத்மன் சூரசேன ஆகியோர் உள்ளடங்கிய மூவரடங்கிய நீதிமன்ற குழாம் முன்னிலையில் விசாரணைக்கு அழைக்கப்பட்டிருந்தது.