மின்சார சபைக்கு எரிபொருள் விநியோக நிறுத்தமானது தற்காலிகமாக இடைநிறுத்தம்

(FASTNEWS | COLOMBO) – இலங்கை மின்சார சபைக்கு எரிபொருள் விநியோகிப்பதை நிறுத்துவதற்கு பெற்றோலியத்துறை தொழிற்சங்கங்கள் நடவடிக்கை எடுத்திருந்த நிலையில், பெற்றோலியத்துறை அமைச்சருடனான கலந்துரையாடலில் பின்னர் குறித்த நடவடிக்கையினை எதிர்வரும் வெள்ளிக்கிழமை(05) நள்ளிரவு 12.00 மணி வரைக்கும் இடைநிறுத்த தீர்மானித்துள்ளதாக பெற்றோலியத்துறை கூட்டு தொழிற்சங்கங்கள் தெரிவித்துள்ளது.