மரண தண்டனையினை உடனடியாக இரத்து செய்யவும் – மனித உரிமைகள் கண்காணிப்பு அமைப்பு

(FASTNEWS| COLOMBO) – ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, மரண தண்டனையினை மீண்டும் நடைமுறைப்படுத்திய வகையில் எடுக்கப்பட்டுள்ள தீர்மானத்தினை உடனடியாக இரத்து செய்யுமாறு சர்வதேச மனித உரிமை அமைப்பான Human Rights Watch அமைப்பு தெரிவித்துள்ளது.

40 வருட காலமாக மரண தண்டனையினை நடைமுறைப்படுத்தாது ஆசியாவில் நற்பெயரினை கொண்டுள்ள நாடாக இலங்கை உள்ள நிலையில், குறித்த தீர்மானம் இலங்கையின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கக் கூடும் என குறித்த அமைப்பு மேலும் சுட்டிக்காட்டியுள்ளது.