கோட்டை – மாலபே இலகு ரயில் பாதை பிரதமர் தலைமையில் இன்று ஆரம்பம்

(FASTNEWS|COLOMBO) – கொழும்பு – கோட்டை மற்றும் மாலபேக்கும் இடையில் இலகு ரயில் பாதை அமைக்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு சினமன் கிரான்ட் ஹோட்டலில் இது தொடர்பான நிகழ்வு பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் இன்று(03) உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்படவுள்ளது.

ஜப்பானின் நிதியுதவியுடன் அமைக்கப்படும் குறித்த இந்த இலகு ரயில் பாதை 11 கிலோ மீற்றர்களைக் கொண்டதாக அமைய உள்ளதுடன், இதில் 16 ரயில் தரிப்பு நிலையங்கள் அமைக்கப்படவுள்ளன.

குறித்த இந்த வேலைத்திட்டத்தை எதிர்வரும் 2024ஆம் ஆண்டு பூர்த்தி செய்ய எதிர்பார்க்கப்படுகிறதாக தெரிவிக்கப்படுகின்றன.