(FASTNEWS|COLOMBO) – நாட்டின் சில பகுதிகளில் இடைக்கிடையே மின்வெட்டு அமுலாகக்கூடும் என, மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.
பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தினால் எரிபொருள் வழங்கப்படாமையினால் ஏற்பட்டுள்ள பிரச்சினைகள் காரணமாக இவ்வாறு மின் வெட்டு அமுலாகக்கூடும் என தெரிவித்துள்ளது.
சில பிரதேசங்களில் நேற்றிரவு மின்விநியோகம் மட்டுப்படுத்தப்பட்டதாக எரிசக்தி அமைச்சின் அபிவிருத்திப் பணிப்பாளர் சுலக்ஷன ஜயவர்தன தெரிவித்துள்ளார்.