ரக்னா லங்கா நிறுவனத்தின் முன்னாள் தலைவர் விக்டர் சமரவீரவுக்கு விளக்கமறியல்

(FASTNEWS | COLOMBO) – ரக்னா லங்கா நிறுவனத்தின் முன்னாள் தலைவர் விக்டர் சமரவீரவை எதிர்வரும் 19ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு இன்று(09) காலி பிரதான நீதிவான் ஹர்ஷன கெக்குனவெல உத்தரவு பிறப்பித்துள்ளார்.

அவன்காட் சம்பவம் தொடர்பில் அவருக்கு எதிராக குற்றச்சாட்டு சுமத்தப்பட்ட நிலையில் நேற்று(08) அவர் குற்றப் புலனாய்வு பிரிவில் சரணடைந்த நிலையில் கைது செய்யப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.