காமினி செனரத் உள்ளிட்ட மூன்று சந்தேக நபர்கள் தொடர்பிலான தீர்ப்பு வழங்கும் திகதி அறிவிப்பு

(FASTNEWS | COLOMBO) – முன்னாள் ஜனாதிபதி செயலணியின் தலைமை அதிகாரி காமினி செனரத் உள்ளிட்ட மூன்று சந்தேக நபர்கள் தொடர்பிலான தீர்ப்பினை எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 08ம் திகதி அறிவிப்பதாக விசேட மேல் நீதிமன்றம் இன்று(09) அறிவித்துள்ளது.

லிட்ரோ கேஸ் நிறுவனத்திற்கு சொந்தமான 500 மில்லியன் ரூபா நிதியை தவறாகப் பயன்படுத்தியமை உள்ளிட்ட 24 குற்றச்சாட்டுகள் அடங்கிய குற்றப்பத்திரிகையின் கீழ் காமினி செனரத் உள்ளிட்டோருக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.