UNP ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பில் ரவி தொடர்ந்தும் விமர்சனம்

(FASTGOSSIP| COLOMBO) – ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் யாரென்பதை, தனி நபரொருவர் தீர்மானிக்க முடியாதெனவும், கட்சியின் செயற்குழு, கட்சியின் ஒட்டுமொத்த உறுப்பினர்களே ஜனாதிபதி வேட்பாளர் குறித்து தீர்மானிக்கப்பட வேண்டும் என்றும் அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.

நேற்று(08) கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது, ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே, அமைச்சர் ரவி கருணாநாயக்க மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.