04 நாட்களில் போதையில் வாகனம் செலுத்திய சாரதிகள் 1500 பேர் கைது

(FASTNEWS| COLOMBO) – நாடளாவிய ரீதியாக மதுபோதையில் வாகனம் செலுத்திய 1500 சாரதிகள் கடந்த 5ஆம் திகதியிலிருந்து இன்று(09) காலை 06.00 மணி வரையான காலப்பகுதியில் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

இதற்கமைய, நேற்று மாலை 6 மணியிலிருந்து இன்று காலை 6 மணிவரை முன்னெடுக்கப்பட்ட விசேட நடவடிக்கையின் போது, 284 சாரதிகள் கைது செய்யப்பட்டுள்ளனரென, பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார்.