(FASTNEWS | COLOMBO) – ஆசிய கரையோர பாதுகாப்பு துறை தலைவர்கள் பங்கு கொள்ளும் 15வது செயற்குழுக் கூட்டத் தொடர் நேற்று(10) கொழும்பில் ஆரம்பமானது.
கொழும்பில் உள்ள தனியார் ஹோட்டலில் இலங்கை கரையோர பாதுகாப்பு திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் ரியர் சமந்த விமலதுங்கவின் தலைமையில் நடைபெற்ற குறித்த இந்த மாநாட்டில் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவன் விஜேவர்த்தனவுக்கு நினைவுச் சின்னம் வழங்கி கௌரவிக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.