அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு ஸ்ரீ.சு.கட்சி ஆதரவு

(FASTNEWS | COLOMBO) – மக்கள் விடுதலை முன்னணியால், அரசாங்கத்துக்கு எதிராக கொண்டு வரப்பட்டுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு, ஆதரவாக வாக்களிக்க ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி தீர்மானித்துள்ளதாக ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

கட்சியின் தலைமையகத்தில் இன்று(11) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.