(FASTNEWS | COLOMBO) – களுத்துறை- கொன்கஸ் சந்தி பகுதியில் ஹெரோயின் வைத்திருந்த ஐந்து நபர்கள் பொலிசாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சந்தேகத்திற்கிடமான முறையில் பயணித்த கார் ஒன்றை பரிசோதனை செய்த போது குறித்த நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
இவர்களிடம் இருந்து 2K600g ஹெரோயினும், 80,550 ரூபாய் பணமும் மீட்கப்பட்டுள்ளது.
குறித்த நபர்கள் 24 முதல் 33 வயதுக்குற்பட்டவர்கள் என காவல்துறை ஊடக பேச்சாளர் அலுவலகம் மேலும் தெரிவித்துள்ளது.