(FASTNEWS | COLOMBO) – வரலாற்றுச் சிறப்புமிக்க கண்டி எசல பெரஹரவின் ஆரம்ப நிகழ்வு எதிர்வரும் மாதம் 2ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது.
கும்பல் பெரஹர ஆகஸ்ட் மாதம் 05ம் திகதி தொடக்கம் 09ம் திகதி வரை நடைபெறவுள்ளது. றன்தோலி பெரஹர ஆகஸ்ட் மாதம் 10ஆம் திகதி இடம்பெறவுள்ளதாக நேற்று(18) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் தியவடன நிலமேவின் பிரதீப் நிலங்கா தேலா தெரிவித்திருந்தார்.
மேலும், ஆகஸ்ட் 15 ஆம் திகதி பிற்ப்பகல் இடம்பெறும் பெரஹரவை அடுத்து தலதாமாளிகை பெரஹர வைபவம் நிறைவடைய உள்ளமையும் குறிப்பிடத்தக்கது.