வெள்ளம் காரணமாக இரண்டு மாணவிகள் உயிரிழப்பு

(FASTNEWS|COLOMBO) – நுவரெலியா, அக்கரப்பத்தனை – டொரிங்டனில் ஆற்று வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட இரட்டையர்களில் ஒருவரின் சடலம் நேற்று மீட்கப்பட்ட நிலையில் மற்றைய சிறுமியின் சடலம் இன்று மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

அக்கரப்பத்தனை, டொரிங்டனிலுள்ள பாடசாலையில் தரம் 07 இல் கல்வி கற்கும் 12 வயதுடைய இரட்டைச் சகோதரிகளான மதியழகன் லட்சுமி, மதியழகன் சங்கீதா ஆகிய மாணவிகளே இவ்வாறு உயிரிழந்தனர்.