ஒபாமாவினால் தான் ஐ.எஸ் பயங்கரவாதம் தலைதூக்கியது

அமெரிக்க அதிபர் ஒபாமாவின் தவறான கொள்கைகளால்தான் ஈராக்கில் ஐ.எஸ். பயங்கரவாதிகள் வளர்ச்சியடைந்ததாக குடியரசுக் கட்சியைச் சேர்ந்த அதிபர் பதவி வேட்பாளர் ஜெப் புஷ் குற்றம் சாடியுள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில்;

ஈராக்கில் கடுமையாகப் போராடி வெற்றி பெற்ற அமெரிக்கப் படையினரை அங்கிருந்து முழுமையாகத் திரும்பப் பெறும் ஒபாமாவின் முடிவு தவறு. அதனால்தான் அங்கு ஐ.எஸ். பயங்கரவாதிகள் வளர்ச்சியடைந்தனர் என்றார் அவர்.

(riz)