(FASTNEWS | COLOMBO) – உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத தாக்குதலை தடுக்க நடவடிக்கை எடுக்கத் தவறியமை தொடர்பில் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ மற்றும் கட்டாய விடுமுறை வழங்கப்பட்டுள்ள பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தர ஆகியோர் தொடர்பிலான வழக்கு மூன்றவாது தினமாக கொழும்பு பிரதான நீதிவான் லங்கா ஜயரத்ன முன்னிலையில் இன்று(22) அழைக்கப்படவுள்ளது.
உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல் விசாரணைகளுக்காக கடந்த ஜூலை மாதம் 03ம் திகதி குறித்த இரு சந்தேகநபர்களும் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினால் கைது செய்யப்பட்டிருந்த நிலையில் கடந்த 09ம் திகதி பிணையில் விடுவிக்கப்படிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
R.Rishma