(FASTGOSSIP | COLOMBO) – இந்திய “World Icon Award” விருது நேற்று(21) பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் எதிர்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் இடம்பெற்றுள்ளது.
இந்தியாவின் தொழிலாளர்களுக்கு ஒவொரு வருடமும் இந்த “World Icon Award” விருது விழா இடம்பெறுவதோடு 2018ம் ஆண்டுக்கான விருது விழா தாய்லாந்தில் இடம்பெற்றதோடு இம்முறை இலங்கையில் நடாத்த அவர்கள் தீர்மானித்திருந்தனர்.
இதன்போது இலங்கையில் தெரிவு செய்யப்பட்ட தொழிலாளர்கள் 10 பேருக்கு விருது வழங்கப்பட்டதோடு, 30 வருட காலமாக இருந்த யுத்தத்தினை நிறைவுக்கு கொண்டு வந்து, உலகிற்கு முன்மாதிரியாக இருந்ததற்காக எதிர்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷவுக்கு விசேட விருதொன்று வழங்கப்பட்டதாகவும் எதிர்கட்சித் தலைவரின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.