சோளத்தின் கொள்வனவு விலை அதிகரிப்பு

சோளத்தின் கொள்வனவு விலை அதிகரிப்பு

(FASTNEWS|COLOMBO) – ஒரு கிலோ சோளத்தின் கொள்வனவு விலையை 5 ரூபாவினால் அதிகரிப்பதாக, கமத்தொழில் அமைச்சர் பி. ஹரிசன் தெரிவித்துள்ளார்.

தேசிய சோள உற்பத்தியாளர்களை ஊக்குவிப்பதற்காக இந் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

தற்பொழுது சோளத்திற்கு சர்வதேச சந்தையில் சிறந்த கேள்வியுள்ளதாகவும் விவசாயிகளிடமிருந்து பெறப்படும் சோளத்தின் விலை தற்போது 45 ரூபாவாக காணப்படுவதுடன், அதனை 50 ரூபாவால் அதிகரிப்பதாகவும் அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.