அனைத்து தோட்ட வைத்தியசாலைகளையும் அரசுடைமையாக்க அமைச்சரவை அனுமதி

(FASTNEWS | COLOMBO) – அனைத்து தோட்ட வைத்தியசாலைகளும் அரசாங்கம் கையகப்படுத்தி அதன் நிர்வாகம் மாகாண சபைக்கு வழங்கப்படும் என சுகாதாரம், போசாக்கு மற்றும் சுதேச வைத்திய அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

நேற்று(23) இடம்பெற்ற மாகாண சுகாதார அமைச்சர்களின் கருத்தரங்கில் கலந்து கொண்டு உரையாற்றும் போது அமைச்சர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

அனைத்து தோட்ட வைத்தியசாலைகளையும் அரசாங்கம் கையகப்படுத்துவது சம்பந்தமாக அண்மையில் இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்திற்கு தாக்கல் செய்யப்பட்ட பத்திரத்திற்கு அனுமதி கிடைத்துள்ளதாகவும் அவர் மேலும் சுட்டிக்காட்டியிருந்தார்.