
என்டர்பிறைஸ் ஸ்ரீலங்கா கண்காட்சி நாளை(24) ஆரம்பம்
(FASTNEWS|COLOMBO) – ரஜரட்ட பிரதேசங்களில் இருந்து 20 ஆயிரம் தொழில் முயற்சியாளர்களை உருவாக்கும் என்டர்பிறைஸ் ஸ்ரீலங்கா திட்டத்தின் இரண்டாவது கண்காட்சி நாளை ஆரம்பமாகவுள்ளது.
புதிய தொழில் முயற்சியாளர்களை உருவாக்குவதே கண்காட்சியின் பிரதான நோக்கமாகும் என ராஜாங்க அமைச்சர் எரான் விக்கிரமரத்ன தெரிவித்துள்ளார்.
இம்முறை கண்காட்சி அனுராதபுரம் வலிசிங்ஹ ஹரிஸ்சந்திர விளையாட்டு மைதானத்தில் இடம்பெறவுள்ளது. என்டர்பிறைஸ் ஸ்ரீலங்கா முன்னேற்றத்தின் முன்னோடி என்பது இம்முறை தொனிப்பொருளாகும்.