அமெரிக்க ஜனாதிபதி மற்றும் பாகிஸ்தான் பிரதமர் சந்திப்பு

(FASTNEWS|COLOMBO) – அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மற்றும் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் ஆகியோருக்கு இடையே முதல்தடவையாக சந்திப்பு இடம்பெற்றுள்ளது.

குறித்த இந்த சந்திப்பின்போது, இரு நாடுகளின் உறவுகள் மற்றும் ஆப்கன் பிரச்சினைகள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டதாக சர்வதேச செய்திகள் தெரிவித்துள்ளன.

இதன்போது காஷ்மீர் விவகாரம் தொடர்பில் இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையில் மத்தியஸ்தம் வகிப்பதற்குத் தயாராகவுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் உறுதியளித்துள்ளார்.