(FASTGOSSIP | COLOMBO) – குருநாகல் போதனா வைத்தியசாலையின் மகப்பேற்று வைத்தியர் ஷாபி சிஹாப்தீன் தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் மகஜர் ஒன்றை கையளிப்பதற்கு நேற்றைய தினம்(23) ரத்ன தேரர் தலைமையில் ஜனாதிபதி செயலகத்துக்கு வருகை தந்த குழுவுக்கு ஜனாதிபதியை சந்திக்க சந்தர்ப்பம் வழங்கப்படவில்லையென ஜனாதிபதி செயலக வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கப்படுகின்றது.
அவ்வாறு இருக்க குறித்த குழு ஜனாதிபதியை சந்திக்க வருகை தந்த போதிலும், ஜனாதிபதி செயலகத்திலுள்ள அதிகாரிகளிடமே தேரருக்கு இந்த மகஜரைக் கையளிக்க நேர்ந்துள்ளதாகவும் மேலும் தெரிவிக்கப்படுகின்றது.