ரீ-56 ரக துப்பாக்கிகள் காணாமல்போன சம்பவம் – CID விசாரணை

(FASTNEWS|COLOMBO) – பாணந்துறை வடக்கு பொலிஸ் நிலையத்தின் ஆயுத களஞ்சியத்திலிருந்து இரு ரீ-56 ரக துப்பாக்கிகள் காணாமல்போன சம்பவம் தொடர்பிலான விசாரணைகள் குற்றப் புலனாய்வுப் பிரிவின் கீழ் கையளிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவான் குணசேகர தெரிவித்திருந்தார்.