(FASTNEWS | COLOMBO) – 2015 மற்றும் 2018ம் ஆண்டுகளில் அரச நிறுவனங்களில் இடம்பெற்ற ஊழல் மோசடிகள் தொடர்பில் ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழுவில் இன்று(25) பிவித்துரு ஹெல உறுமயவின் பிரதான செயலாளர் உதய கம்மன்பில சாட்சி வழங்க அழைக்கப்பட்டுள்ளார்.
முன்னாள் அமைச்சர் றிசாட் பதியூதீன் மன்னார் மாவட்டத்தில் முறைகேடாக காணிகளை கையகப்படுத்தியதாக முன்வைக்கப்பட்ட முறைப்பாட்டுக்கமைய அவரிடம் இவ்வாறு சாட்சி பதிவு செய்யப்படவுள்ளது.