(FASTGOSSIP | COLOMBO) – பிரித்தானியாவில் இருந்து இலங்கைக்குக் கொண்டுவரப்பட்டுள்ள கழிவுப் பொருட்கள் அடங்கிய கொள்கலன்களில் உள்ள குப்பைகளை உடனடியாக மீள் சுழற்சிக்காக திம்புலாகல’யில் உள்ள மஹவலி இடங்களுக்கு கொண்டு செல்வதற்கு அரசு சூழ்ச்சி செய்வதாகவும் அவ்வாறு இல்லாது அரசு இதனை மீள் சுழற்சிக்காக எடுத்துக்கொள்ளாதவிடத்து கடுமையான நடவடிக்கை எடுக்கபப்டும் எனவும் பொலன்னறுவ, ஷாசனாரக்ஷக பல மண்டலவின் முன்னாள் பதிவாளர் திம்புலாகல ராஹுலாலங்கார தேரர் தெரிவித்துள்ளார்.
வெலிகந்த சுசிரிகம ஸ்ரீ சுதர்ஷணாராம விகாரையில் நேற்று(25) இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே தேரர் மேற்கொண்டவாறு தெரிவித்திருந்தார்.