(FASTNEWS | COLOMBO) – உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத தாக்குதல் தொடர்பில் விசாரணை செய்ய நியமிக்கப்பட்டுள்ள பாராளுமன்ற தெரிவுக் குழுவில் சாட்சியமளிக்க பிரதமர் ரணில் விக்கிரமசிங்க எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 06ம் திகதி அழைக்கப்பட்டுள்ளதாக பாராளுமன்ற விசேட தெரிவுக் குழுவினை பிரதிநிதித்துவப்படுத்தும் பாராளுமன்ற உறுப்பினர் ஆஷு மாரசிங்க தெரிவித்திருந்தார்.
அன்றைய தினம் மேலும் சில அமைச்சர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவான் விஜயவர்த்தன, அமைச்சரவை அமைச்சர்களான சாகல ரத்நாயக்க மற்றும் ரஞ்சித் மத்துமபண்டார ஆகியோரே இவ்வாறு சாட்சியம் அளிக்கவுள்ளனர்.