(FASTNEWS | COLOMBO) – பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்சவுக்கு எதிராக இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவால் தாக்கல் செய்யப்பட்டிருந்த வழக்கு விசாரணைகளை ஆகஸ்ட் மாதம் 08ம் திகதி வரை ஒத்திவைக்க கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று(29) உத்தரவிட்டுள்ளது.
சுமார் ரூ.75 மில்லியன் பெறுமதியான சட்டவிரோத சொத்துக்களை சம்பாதித்தமை தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.