(FASTNEWS|COLOMBO) – இலங்கையின் வடமேல் கடற்பரப்பில் 2 ஆயிரத்து 337 கிலோ கிராம் பீடி சுற்றும் இலைகளுடன் இந்திய பிரஜைகள் 06 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.
பீடி இலைகளைக் கொண்ட 74 பொதிகள் கடற்படையால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதுடன், குறித்த இந்திய மீனவர்கள் பயணித்த மீன்பிடி படகும் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது.