(FASTNEWS|COLOMBO) – பாகிஸ்தானின் ராவல்பிண்டி பகுதியில் இராணுவ விமானம் குடியிருப்பு பகுதிக்குள் கீழே விழுந்து நொறுங்கியதில் வீரர்கள் உட்பட 15 பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.
உயிரிழந்தவர்களில் 5 பேர் ராணுவ வீரர்கள் என இராணுவம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த விபத்தில் 20 பேர் காயம் அடைந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விபத்துக்கான காரணம் குறித்த தகவலை இராணுவம் வெளியிடவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.