(FASTNEWS|COLOMBO) – கிளிநொச்சி – ஜயந்திநகர் பகுதியில் தாயும் மகனும் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளனர்.
நேற்றிரவு(29) வீட்டில் உறங்கிக் கொண்டிருந்த சந்தர்ப்பத்தில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக, பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
74 வயதுடைய தாயார் மற்றும் 34 வயதுடைய மகனுமே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தச் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர்கள் இதுவரை அடையாளம் காணப்படவில்லை என தெரிவிக்கப்படுகின்றன.