(FASTNEWS | COLOMBO) – ஐக்கிய தேசியக் கட்சியின் விசேட செயற்குழுக் கூட்டம் கட்சித் தலைவர் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் சிறிகொத்த தலைமையகத்தில் நாளை (01) இடம்பெறவுள்ளது.
ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையில் எதிர்வரும் 5ஆம் திகதி புதிய அரசியல் கூட்டணி உதயமாகவுள்ள நிலையின் குறித்த கூட்டணியின் தலைவராக சபாநாயகர் கரு ஜயசூரியவை நியமிப்பது தொடர்பாக இனறைய கூட்டத்தில் ஆராயப்படவுள்ளது.
மேலும் ஜனாதிபதி வேட்பாளர் விவகாரம் தொடர்பாகவும் இதன்போது விரிவாகக் கலந்துரையாடப்படவுள்ளது.