(FASTNEWS|COLOMBO) – ருஹுணு பல்கலைக்கழகத்தின் அறிவியல் பீடம் காலவரையறையின்றி மூடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.
எலியகந்த விடுதியினுள் பகிடிவதை இடம்பெறுவதாக கிடைத்த தகவல் ஒன்றுக்கு அமைய நேற்றிரவு மேற்கொண்ட சோதனையின் போது மாணவர்கள் சிலர், பீடாதிபதிக்கு அச்சுறுத்தல் விடுத்துள்ளதாக அதன் துணை வேந்தர், பேராசிரியர் சுஜிவ அமரசேன தெரிவித்துள்ளார்.
இதற்கமைய அறிவியல் பீடம் மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதோடு, இன்று மாலை 6.00 மணிக்கு முன்னர் மாணவர்கள் வெல்லமடம வளாகத்திலிருந்து வெளியேறுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.