(FASTNEWS|COLOMBO) – இன்று(01) முதல் வடக்கு ரயில் மார்க்கத்தின் நேர அட்டவணையில் மாற்றம் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக, ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதன்படி, தலைமன்னாரிலிருந்து அநுராதபுரம், மதவாச்சி ஊடாக கொழும்பு கோட்டை வரை காலை மற்றும் இரவு வேளைகளில் பயணிக்கும் ரயில், இன்று முதல் கோட்டையிலிருந்து தலைமன்னார் – யாழ்ப்பாணம் ஊடாக காங்கேசன்துறை வரை பயணிக்கவுள்ளதாக திணைக்களம் தெரிவித்துள்ளது.