புத்தளம் – மன்னார் வீதியில் 4 ம் கட்டை பகுதியில் இன்று இரவு (13-08-2015) சிறியரக விபத்து ஒன்று ஏற்பட்டது.
வேகமாக வந்த வேன் வண்டியின் குறுக்கே மாடு ஒன்று கடந்ததாலேயே இவ்விபத்து ஏற்பட்டதாக சம்பவத்தை நேரில் கண்டவர்கள் தெரிவிக்கின்றனர்.
இதன் போது யாருக்கும் உயிர்சேதம் ஏற்படாதப்போதும் விபத்து நடைபெற்ற இடத்திலேயே மாடு இறந்தமை குறிப்பிடத்தக்கது.