அரச ஊழியர்களுக்கு நிகராக தனியார் ஊழியர்களது சம்பளம் அதிகரிப்பு

(FASTGOSSIP | COLOMBO) – அரசாங்க ஊழியர்களை போன்று தனியார் ஊழியர்களின் சம்பளத்தை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என, அரச தரப்பு பாராளுமன்றில் அறிவித்துள்ளது.

நிலையியல் கட்டளையின் கீழ், எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ ஆற்றிய உரைக்கு பதிலளிக்கும் வகையில், அமைச்சர் கயந்த கருணாதிலக்க உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்திருந்தார்.