ரயில்வே ஊழியர்கள் சிலர் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில்

(FASTNEWS | COLOMBO) – புகையிரத திணைக்களத்தில் மாற்று, சாதாரண மற்றும் தற்காலிக அடிப்படையில் பணியாற்றும் சுமார் 700 ஊழியர்களது சேவையினை சேவையை உடனடியாக உறுதிப்படுத்தக் கோரி ஒன்றிணைந்த ரயில்வே தொழிற்சங்க முன்னணி தற்போது ரயில்வே திணைக்கள தலைமையக முன்பாக எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றது.