(FASTNEWS|COLOMBO) – டுபாயில் இருந்து நாடு கடத்தப்பட்ட பின்னர் கைது செய்யப்பட்டு பொலிஸ் காவலில் தடுத்து வைக்கப்பட்டுள்ள பாதாள உலக குழு தலைவர் கஞ்சிபான இம்ரான் இன்று (07) கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டிருந்தார்.
சந்தேக நபரான கஞ்சிபான இம்ரானை செப்டம்பர் 04 ஆம் திகதி வரையில் தடுத்து வைத்து விசாரணை செய்ய அனுமதி வழங்கியுள்ளது.
அன்றைய தினம் விசாரணை அறிக்கைகளை சமர்பிக்குமாறும் நீதவான் உத்தரவிட்டுள்ளார்.