கடும் மழை காரணமாக விமான நிலையத்திற்கு பூட்டு

(FASTNEWS|COLOMBO) – கேரளாவில் பெய்து வரும் கடும் மழை காரணமாக ஓடுபாதையில் தண்ணீர் சூழ்ந்ததால் கொச்சி விமான நிலையம் நள்ளிரவு வரை மூடப்படுகிறது என அதிகாரிகள் தெரிவித்தனர்.

கேரளாவின் இன்று கடும் மழை காரணமாக சிவப்பு எச்சரிக்கை விடப்பட்டது. இதன் காரணமாக இடுக்கி மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

கொச்சி விமான நிலையம் மூடப்பட்டுள்ளதால் விமான நிலையத்தில் மற்ற சேவைகளும் பாதிப்படைந்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.