(FASTNEWS|COLOMBO ) – 2025ம் ஆண்டளவில் இலங்கையை விசர்நாய்க்கடி நோயை முற்றாக ஒழித்த நாடாக மாறுவதற்கு திட்டமிட்டிருப்பதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அனில் ஜாசிங்ஹ தெரிவித்துள்ளார்.
கடந்த ஆண்டு இலங்கையில் இந்த விசர்நாய்க்கடி நோயினால் 25 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.
உலகளாவிய ரீதியில் வருடாந்தம் விசர்நாய்க்கடி நோய்த் தொற்றுக்கு சுமார் 55 ஆயிரம் பேர் உள்ளாகின்றனர் என்றும் அவர் குறிப்பிட்டார்.
இந்நிலையில் இலங்கையில் விசர்நாய்க்கடி நோயை முற்றாக ஒழிப்பதற்கு திட்டம் வகுக்கப்பட்டிருப்பதாகவும், இது 2025 ஆம் ஆண்டளவில் வெற்றியளிக்கும் எனவும் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அனில் ஜாசிங்ஹ மேலும் குறிப்பிட்டுள்ளார்.