வெற்றிகரமாக புத்தளத்தை சென்றடைந்தது கொழும்பு குப்பை

(FASTNEWS|COLOMBO) –  கொழும்பு குப்பைகளை ஏற்றிய 17 லொறிகள் அறுவக்காட்டை சென்றடைந்துள்ளது.

நேற்று இரவு 11.30 மணியளவில் குப்பைகளை ஏற்றிய லொறிகள் புத்தளத்தை சென்றடைந்துள்ளது.

கடந்த திங்கட்கிழமை முதல் கெரவலப்பிடிய பகுதியில் கொழும்பில் சேகரிக்கப்படும் குப்பைகளை கொட்டுவதனை மாநகர சபை மற்றும் மேல் மாகாண சுற்றுலாத்துறை அமைச்சு ஆகியன இடைநிறுத்தியிருந்தது.

இதனால் கொழும்பின் பல பிரதேசங்கள் குப்பைகள் தேங்கிக்கிடந்தன இதனால் மக்கள் பெரும் அசெகரியங்களுக்கு முகம் கொடுத்தனர்.