குப்பைகளை ஏற்றி சென்ற பாரவூர்திகள் மீது கல் எறிந்த மூவர் கைது

(FASTNEWS|COLOMBO ) – கொழும்பில் இருந்து அருவக்காறு வரை குப்பைகளை ஏற்றி சென்ற பாரவூர்திகள் மீது கல் எறிந்த சம்பவம் தொடர்பில் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மூன்று பாரவூர்திகளுக்கு இவ்வாறு தாக்குதல் நடத்தப்பட்டிருப்பதாகவும் பாரவூர்தி சேதமடைந்திருப்பதாகவும் பொலிசார் தெரிவித்துள்ளனர்.

சந்தேக நபர்கள் புத்தளம் பகுதியை சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.