பாராளுமன்ற தெரிவுக்குழு இன்று மீண்டும் கூடவுள்ளது.

(FASTNEWS|COLOMBO ) – கடந்த ஏப்ரல் 21 ஆம் திகதி பயங்கரவாத தாக்குதல் தொடர்பில் ஆராயும் பாராளுமன்ற தெரிவுக்குழு இன்று(20) பிற்பகல் 3.30க்கு மீண்டும் கூடவுள்ளது.

ஏப்ரல் 21 பயங்கரவாத தாக்குதல் தொடர்பில் விசாரணை மேற்கொள்வதற்காக ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்ட மூவரடங்கிய குழு இன்று தெரிவிக்குழுவில் சாட்சியமளிக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

இதன்படி, உயர்நீதிமன்ற நீதியரசர் விஜித் மலல்கொட, முன்னாள் காவற்துறைமா அதிபர் என். கே இலங்ககோன் மற்றும் சட்டம் மற்றும் ஒழுங்குதுறை அமைச்சின் முன்னாள் செயலாளர் பத்மசிறி ஜயமான்ன ஆகியோர் பாராளுமன்ற தெரிவிக்குழுவில் சாட்சியமளிக்கவுள்ளனர்.