(FASTNEWS|COLOMBO ) – ஹொங்கொங் விவகாரம் தொடர்பில் உண்மைக்குப் புறம்பான தகவல்களைப் பரப்பிய பேஸ்புக் மற்றும் டுவிட்டர் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
ஹொங்கொங் அரசியல் தொடர்பில் கருத்துக்களைப் பதிவிட்ட 936 கணக்குகளை முடக்கியுள்ளதாக டுவிட்டர் நிறுவனம் தெரிவித்துள்ளது.
சீனப் பிரஜைகளின் கணக்குகளே இவ்வாறு வன்முறையைத் தூண்டிய குற்றச்சாட்டில் முடக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.